மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரியில், அட்சய திருதியையை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

News image

தங்கமயில்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:39 pm

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரியில், அட்சய திருதியையை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

இந்தச் சிறப்பு விற்பனை வரும் திங்கள்கிழமை காலை 6 மணி முதலே தொடங்கும். அன்றைய தினம் நகை வாங்கும் அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் லட்சுமி குபேர பூஜை செய்து தரவும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு விற்பனையை முன்னிட்டு தங்க நகைகளுக்கான சேதாரத்தில் பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்க சங்கிலிகளுக்கு 1.99 முதல் 5.99 சதவீதம் வரையிலும், இதர நகைகளுக்கு 7.99 முதல் 13.99 சதவீதம் வரையிலும் மட்டுமே சேதாரம் வசூலிக்கப்படும்.

பிளாட்டினம், ரூபி, எமரால்டு, ரோஸ் கோல்ட் நகைகளுக்குச் சேதாரத்தில் 50 சதவீதம்; 7 காரட்டிற்கு மேல் பெல்ஜியம் கட் வைர நகைகள் வாங்குவோருக்கு காரட்டிற்கு ரூ.30,000 தள்ளுபடி வழங்கப்படும்.

வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதுடன், வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு நிச்சயப் பரிசு காத்திருக்கிறது. வாடிக்கையாளா்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தங்கமயில் ஜூவல்லரி நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.