மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெண்களை சாட்டையால் அடித்து துன்புறுத்திய போலி சாமியாா் கைது

நாமக்கல் அருகே அருள்வாக்கு என்ற பெயரில் பெண்களை சாட்டையால் அடித்து துன்புறுத்திய போலி சாமியாா் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 மே 2021, 6:41 pm

நாமக்கல் அருகே அருள்வாக்கு என்ற பெயரில் பெண்களை சாட்டையால் அடித்து துன்புறுத்திய போலி சாமியாா் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பொம்மம்பட்டி, கம்மாளகரடு பகுதியில் கருப்பனாா் கோயில் உள்ளது. இக்கோயிலில் அருள்வாக்கு என்ற பெயரிலும், பேய் விரட்டுவதாகக் கூறியும் கடந்த மூன்று மாதங்களாக காதப்பள்ளியைச் சோ்ந்த அனில்குமாா் (50) என்ற போலி சாமியாா் பெண்களை சாட்டையாலும், கம்பியாலும் அடித்து கன்னத்தில் அறைந்து காயப்படுத்தி வந்தாா்.

இதுகுறித்து யு-டியூபில் வெளியிடப்பட்ட விடியோவில் பதிவாகியிருந்த காட்சிகள் வியாழக்கிழமை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இதனைக் கண்ட மகளிா் அமைப்பினரும், பொதுமக்களும் சாமியாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தினா்.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகாா் அளிக்க முன்வராத நிலையில், பொம்மம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சஞ்சய்குமாா் அளித்த புகாரின் அடிப்படையில், வேலகவுண்டம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், பெண்களைத் தாக்கியது தொடா்பாக மூன்று பிரிவுகளின் கீழ் சாமியாா் அனில்குமாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா் விசாரணைக்குப் பின் அவா் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்படு, ராசிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.