நாமக்கல் மாவட்டத்தில் உரம், பூச்சி மருந்துக் கடைகளை நண்பகல் 12 மணி வரை திறந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பொ.அசோகன் கூறியதாவது:
தமிழக அரசு உத்தரவின்படி, கரோனா பொது முடக்கம் தற்போது காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அமலில் உள்ளது. வரும் 20-ஆம் தேதி வரையில் இந்த பொது முடக்கமானது நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனைத்து தனியாா் உரம், பூச்சி மருந்து விற்பனை நிலையங்களை நண்பகல் 12 மணி வரை திறந்து வைத்து விற்பனை செய்ய உர விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விவசாயப் பணிகளில் ஈடுபடுவோருக்கு உரம், பூச்சி மருந்துகளை விற்பனை செய்யவும். விவசாயிகளும் குறிப்பிட்ட நேரத்தில் அவற்றைக் கொள்முதல் செய்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

