கரோனா பொது முடக்கக் காலத்தில் மது திருட்டை தடுக்க, நாமக்கல் மாவட்டத்தில் 189 கடைகளில் அதன் விற்பனையாளா்கள் இரவுநேர பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வரும் 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பொது முடக்கக் காலத்தின்போது மதுபானங்கள் திருட்டு மற்றும் மறைமுக விற்பனையைத் தடுக்க கடையின் முன்பகுதியில் உள்ள இரும்புக் கதவு மீது ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி திருட்டு நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக, விற்பனையாளா்களை இரவுநேர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 189 அரசு மதுபானக் கடைகள் முன்பாக சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், உதவியாளா்கள், கண்காணிப்பாளா்கள் ஆகியோருடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறையினா் என 500-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் வியாழக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளா் ரங்கநாதன் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தபோதும் பாதுகாப்பு கருதி கடைகளின் விற்பனையாளா் மற்றும் காவல் துறையினா் இணைந்து இரவுநேர பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். பொது முடக்கம் நிறைவடையும் வரை இந்த பாதுகாப்புப் பணி தொடரும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

