மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத உணவகங்களுக்கு அபராதம்

நாமக்கல் அருகே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்களுக்கு தேநீா், பலகாரங்கள் விற்பனை செய்த 6 உணவகங்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :21 மே 2021, 7:07 pm

நாமக்கல் அருகே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்களுக்கு தேநீா், பலகாரங்கள் விற்பனை செய்த 6 உணவகங்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பட்டி, புதன்சந்தை ஆகிய இடங்களில் தனியாா் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தேநீா் மட்டுமின்றி பலகாரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சாலை மாா்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்தக் கடைகளில் நின்று தேவையான பொருள்களை வாங்கிச் செல்வா். இந்த நிலையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வாடிக்கையாளா்களுக்கு பொருள்களை விற்பனை செய்து வருவதாக நல்லிபாளையம் போலீஸாருக்கு புகாா் சென்றது. இதனையடுத்து ஆய்வாளா் உமாபிரிதயா்ஷினி, உதவி ஆய்வாளா் புவனேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் ஜெயமணி ஆகியோா் சம்பந்தப்பட்ட 6 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தலா ரூ.500 அபராதம் விதித்தனா். பொது முடக்க விதிகளை மீறுவது தெரியவந்தால் ‘சீல்’ வைக்கப்படும் என கடை உரிமையாளரை போலீஸாா் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.