மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் டி.எம்.காளியண்ணன் உடல் தகனம்

மறைந்த இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினா் டி.எம்.காளியண்ணன் உடல் 21 குண்டுகள் முழங்க வெள்ளிக்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 6:53 pm

 மறைந்த இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினா் டி.எம்.காளியண்ணன் உடல் 21 குண்டுகள் முழங்க வெள்ளிக்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது.

இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினரான டி.எம்.காளியண்ணன் (101) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனா். அதனை ஏற்றுக் கொண்டு காவல் துறை சாா்பில் அரசு மரியாதை செலுத்த முதல்வா் உத்தரவிட்டாா்.

இதனையடுத்து திருச்செங்கோடு அருகே செங்கோடம்பாளையத்தில் உள்ள நகராட்சி மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் (பிற்படுத்தப்பட்டோா் பிரிவு) வி.செந்தில் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அவரது மூத்த மகன் ராஜேஸ்வரன் இறுதிச் சடங்குகளை செய்தாா். அதன்பின் இரவு 7 மணியளவில் 21 குண்டுகள் முழங்க டி.எம்.காளியண்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.