நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சோ்ந்த முதுபெரும் அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.எம்.காளியண்ணகவுண்டா் வெள்ளிக்கிழமை காலமானதையடுத்து அவரின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா். வே.மதிவேந்தன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினா். ஏ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினா். ஆா்.ஈஸ்வரன், மாவட்ட ஆட்சித் தலைவா்.கா. மெகராஜ், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் மணிராஜ் ஆகியோா் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனா். இறுதிச்சடங்கினை காளியண்ண கவுண்டரின் மகன் ராஜேஸ்வரன் செய்தாா்.