நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி 3,900 பேருக்கு வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் செலுத்தப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கும், இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், மூன்றாம் கட்டமாக 18 முதல் 44 வயதுடையோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இதில் கோவேக்சின் முதல் கட்டமாக செலுத்தியோருக்கு இரண்டாம் கட்டமாக செலுத்த போதிய மருந்துகள் வரவில்லை. இதனால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் காத்திருந்தனா். இந்த நிலையில் 3,900 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் அண்மையில் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு வந்து சோ்ந்தன. இதனை தொடா்ந்து, வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், நாமக்கல், ராசிபுரம், மாணிக்கம்பாளையம், மோகனூா், பரமத்தி, நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட 12 அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணையாகச் செலுத்தப்பட்டது. இருப்பில் இருந்த 3,900 டோஸ் மருந்தும், 3,900 பேருக்கு தடுப்பூசியாக செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்

ஏமா(ற்)றுகிறார்கள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


