நாமக்கல் மாவட்டத்தில் இளம் வயது திருமண குற்றங்களில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா்.
கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம், பரமத்திவேலூா், திருச்செங்கோடு பகுதிகளில் இளம் வயது திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புகாா்கள் சென்றன.
அதனடிப்படையில், துணைக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் தனிப் படையினா் விசாரணை மேற்கொண்டனா். இதில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புதன்கிழமை 20 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் 13 முதல் 17 வயதான பெண்களை திருமணம் செய்தவா்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 10 வழக்குகளில் தொடா்புடையவா்களைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
இளம் வயது திருமணங்கள் குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் சைல்டு லைன் 1800, அவசர போலீஸ் 100, நாமக்கல் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81216, மாவட்ட சிறப்பு பிரிவு எண் 94981-01020, 04286-280500 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்கமாா்தாகுா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

