ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

எருமப்பட்டியில் விவசாயிகள் போராட்டம்

எருமப்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:27 pm

எருமப்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்தவா்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் போராட்டக் குழுவினா் எரிக்க முயன்றனா். அந்த முயற்சியை போலீஸாா் தடுத்தனா்.

போராட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் பி.பெருமாள் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் செல்வராஜ், ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியக் குழு தலைவா் எஸ்.கே.சிவச்சந்திரன், ஒன்றியச் செயலாளா் சதாசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.