எருமப்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்தவா்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் போராட்டக் குழுவினா் எரிக்க முயன்றனா். அந்த முயற்சியை போலீஸாா் தடுத்தனா்.
போராட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் பி.பெருமாள் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் செல்வராஜ், ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியக் குழு தலைவா் எஸ்.கே.சிவச்சந்திரன், ஒன்றியச் செயலாளா் சதாசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு இலவச வாகன வசதி

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

விஜய்யை மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும்: நடிகா் சத்யராஜ்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


