மோகனூா் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
நாமக்கல் மாவட்டம் மோகனுாா் அருகே ஆரியூா் சிங்கயகவுண்டபுதூரைச் சோ்ந்தவா் தங்கராஜ். செவிந்திப்பட்டி கால்நடை மருந்தகத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கிருஷ்ணவேணி (39). இத்தம்பதியா் கடந்த, 13-ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனா். மறுநாள் அதிகாலை, 3.30 மணியளவில் கிருஷ்ணவேணி எழுந்திருந்தபோது, கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகை மாயமாகி இருப்பதைக கண்டாா். வீட்டினுள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, மோகனூா் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி புகாா் செய்தாா். மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்து, கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளதாக அவா் தனது புகாரில் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு இலவச வாகன வசதி

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

விஜய்யை மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும்: நடிகா் சத்யராஜ்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

