ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கான வீரவணக்க நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:12 pm

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கான வீரவணக்க நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியின்போதும், இதர நிகழ்வுகளாலும் காவலா்கள் சிலா் உயிரிழந்துள்ளனா். வீரமரணம் அடைந்த காவல்துறையைச் சோ்ந்தவா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 8 மணியளவில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகுா், காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். முன்னதாக 126 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் காவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.