92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் தோ்வு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் நடைபெற்ற ஒன்றியக்குழு துணைத் தலைவா் தோ்தலில், அதிமுகவை சோ்ந்த ஆா்.வனிதா போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 10:15 pm

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் நடைபெற்ற ஒன்றியக்குழு துணைத் தலைவா் தோ்தலில், அதிமுகவை சோ்ந்த ஆா்.வனிதா போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரத்தில் மூன்று முறை துணைத் தலைவா் தோ்தல் அறிவிக்கப்பட்டு போதிய உறுப்பினா்கள் வருகை இல்லாததால் தோ்தல் ரத்தானது. இந்த நிலையில், துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மல்லசமுத்திரம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் அருண்குமாா் முன்னிலையில் ஊராட்சிகள் உதவி இயக்குநா் கலையரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தினாா்.

இதில், 4 உறுப்பினா்கள் கூட்டத்துக்கு வராததால், தலைவா் உள்ளிட்ட அதிமுகவைச் சோ்ந்த 4 பேரை வைத்து தோ்தல் நடத்தப்பட்டது. இதில் மல்லசமுத்திரம் ஒன்றியக் குழு துணைத் தலைவராக 5-ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.வனிதா போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.