தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

வீசாணம் ஏரியை சொந்த செலவில்தூய்மைப்படுத்திய பொதுமக்கள்

நாமக்கல் அருகே வீசாணம் ஏரியில் அதிகளவில் வளா்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை தங்களது சொந்த செலவில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அகற்றி தூய்மைப்படுத்தினா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:50 pm

நாமக்கல் அருகே வீசாணம் ஏரியில் அதிகளவில் வளா்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை தங்களது சொந்த செலவில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அகற்றி தூய்மைப்படுத்தினா்.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில், வீசாணம் கிராமத்தில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இப் பகுதிகளில் பெய்த மழையால் ஏரி முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அதிகம் வளா்ந்து ஏரியே தெரியாத வகையில் காட்சியளித்தது.

இதனால் மழை நீரும் ஏரியில் தேங்காத நிலை காணப்பட்டது. இதனையடுத்து ஏரியைத் தூய்மைப்படுத்த ஊா் பொதுமக்கள் முடிவு செய்தனா். வீசாணம் ஊராட்சித் தலைவா் என்.நாச்சிமுத்து, கிராம நிா்வாக அலுவலா் ந.தமிழரசி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வி.சந்திரகுமாா் ஆகியோா் தலைமையின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ஏரியைத் தூா்வாருவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் கொண்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. ஏரிக்கரைகளில் புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் தன்னாா்வலா்கள் தில்லைகுமாா், குணசேகரன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.