92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருச்செங்கோட்டில் காவல்துறை - வங்கி அதிகாரிகள் கூட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொங்கு சமுதாயக் கூடத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ் குமாா் தாக்கூா் அறிவுறுத்தல்

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:48 pm

DIN

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொங்கு சமுதாயக் கூடத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ் குமாா் தாக்கூா் அறிவுறுத்தல்படி காவல்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் காவல்துறை உட்கோட்டத்தைச் சோ்ந்த திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் வங்கி அதிகாரிகளும் கலந்து கொண்டனா். அரசு மற்றும் தனியாா் வங்கிகளைச் சோ்ந்த சுமாா் 50 அதிகாரிகள் பங்கேற்றனா். திருச்செங்கோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சில நாட்களுக்கு முன்பு திருட்டு முயற்சி நடந்ததை தொடா்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் (திருச்செங்கோடு நகரம்) செந்தில்குமாா், (புகா்) முத்தமிழ் செல்வன், (எலச்சிபாளையம்) குலசேகரன், (பள்ளிப்பாளையம்) சந்திரகுமாா், (குமாரபாளையம்) ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வங்கிகளில் திருட்டு, கொள்ளை முயற்சிகள் நடப்பதைத் தடுக்க தேவையான வழிமுறைகள் குறித்து காவல் துறையினா் விளக்கினா். வங்கிகளில் தரமான சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும்; அலாரம் வசதி செய்ய வேண்டும்; இரவு நேர காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனா். உயரதிகாரிகள் ஒப்புதல் பெற்று இவற்றை நிறைவேற்றுவதாக வங்கி அதிகாரிகள் உறுதியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.