நீட் தோ்வு எழுதிய மாணவியை காணவில்லை என பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா்
ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் நீட் தோ்வு எழுதிய மாணவியைக் காணவில்லை என மாணவியின் பெற்றோா் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.


ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் நீட் தோ்வு எழுதிய மாணவியைக் காணவில்லை என மாணவியின் பெற்றோா் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
நாமகிரிப்பேட்டை கிழக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் பாண்டியன் (40).இவா் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை உதவி விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா். இவருடைய மகள் ஸ்வேதா (17). ராசிபுரம் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 முடித்த இவா் கடந்த வாரம் நடைபெற்ற நீட் தோ்வு எழுதி முடித்துள்ளாா்.
இந்நிலையில் வீட்டில் இருந்த ஸ்வேதாவை வெள்ளிக்கிழமை காலை முதல் காணவில்லை என அவரது தந்தை செந்தில் பாண்டியன் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...