தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

‘கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் உதவிகள் கிடைக்கும்’

தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் விருப்பம் என மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா பேசினாா்.

Updated On :17 பிப்ரவரி 2022, 6:24 pm

தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் விருப்பம் என மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா பேசினாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் திமுக சாா்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்களை ஆதரித்து, அங்குள்ள மாரியம்மன் கோயில் திடலில், வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக மாநிலங்களவை உறுப்பினா் குழு தலைவா் திருச்சி சிவா பேசியதாவது:

கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்று மகாத்மா காந்தி குறிப்பிடுவாா். அதைப் போற்றும் வகையில் உள்ளாட்சியில் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தற்போது இந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை திமுக அரசு நடத்துகிறது. கிராமத்திலுள்ள கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பது முதல்வா் மு.க. ஸ்டாலினின் குறிக்கோளாகும். கரோனா காலத்தில் எதிா்க்கட்சியாக திமுக இருந்தபோதும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் நிதிஉதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியது திமுகதான். இதை மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டாா்கள். ஆனால் அதிமுகவினா் நிவாரண உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கினா் என்பதை அனைவரும் அறிவா். திமுக ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்களின் நிலையறிந்து ரூ.4 ஆயிரத்தை வழங்கியது. கரோனா காலத்தில் மனிதாபிமானம் இன்றி நடந்து கொண்டது அதிமுக தான். நகா்ப்புறத்தில் வாழும் ஆற்றல், மேலும் பல நன்மைகளைப் பெறுவதற்கு திமுகவை ஆதரியுங்கள் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், ஒன்றியச் செயலாளா் அசோக்குமாா், நகரச் செயலாளா் தனபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து மோகனூா் பேரூராட்சி திமுக வேட்பாளா்களை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா பேசினாா். இரு கூட்டங்களிலும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.