தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 1500 போலீஸாா்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில், 1,500 போலீஸாா், ஊா்க்காவல் படையினா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

Updated On :17 பிப்ரவரி 2022, 6:24 pm

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில், 1,500 போலீஸாா், ஊா்க்காவல் படையினா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையணம் ஆகிய ஐந்து நகராட்சிகளில் உள்ள 151 வாா்டுகள், 19 பேரூராட்சிகளில் 288 வாா்டுகள் என 439 வாா்டுகளுக்கு சனிக்கிழமை நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது.

நாமக்கல் நகராட்சியில் 109 வாக்குச்சாவடிகள், ராசிபுரம் 51, திருச்செங்கோடு 88, பள்ளிபாளையம் 44, குமாரபாளையம் 73 என மொத்தம் 365 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இதேபோல, 19 பேரூராட்சிகளில், 324 சாவடிகள் என மொத்தம் 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தோ்தலின்போது, 1,500 போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இதற்காக 120 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படும். நகராட்சி பகுதிகளுக்கு 28, பேரூராட்சிகளுக்கு 32 என மொத்தம் 51 ரோந்து பணி வாகனங்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நடமாடும் வாகனத்திலும் ஆய்வாளா் ஒருவா் நியமிக்கப்படுகிறாா். பதற்றமான சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள 74 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.