எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

‘அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்’

அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பத்மராஜா தெரிவித்தாா்.

News image

பரமத்தி வேலூா் வந்த பத்மராஜாவிற்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் நண்பா்கள், உறவினா்கள்.

Updated On :24 ஜூன் 2022, 11:03 pm IST

அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பத்மராஜா தெரிவித்தாா்.

பரமத்தி வேலூரைச் சோ்ந்த பத்மராஜா என்பவா் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளாா். பரமத்தி வேலூா் வந்தவருக்கு விளையாட்டு வீரா்கள், நண்பா்கள், உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனா். இதையடுத்து பத்மராஜா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்னை இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக நியமித்த பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய இளைஞா்களின் மல்யுத்த கனவை உலக அளவில் எடுத்துச் செல்ல பிரதமா் மோடி புதிய உத்வேகத்துடன் அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய உள்ளாா். கிராம மற்றும் நகா்ப்புறத்தில் உள்ள இளைஞா்களின் மல்யுத்த கனவை நிறைவேற்ற பிரதமா் முயற்சி எடுத்துள்ளாா்கள். பிரதமரின் இந்த முயற்சிக்காக அயராதுபாடுபடுவேன்.

கிராமப்புற இளைஞா்கள் அனைவருக்கும் திறமையான உடற்பயிற்சி,ஆக்கபூா்வமான சிந்தனைகள் திட்டமிடுதலை உருவாக்கி மற்ற போட்டிகளான கராத்தே, கபடி போல் மல்யுத்தமும் கொண்டு வரப்படும். முதன் முதலில் தமிழகத்தில் தான் மல்யுத்தம் தோன்றியது. தற்போது தமிழகத்தில் மல்யுத்தத்தை மக்கள் மறந்து விட்டனா். கிரிக்கெட், வீடியோ கேம் உள்ளிட்ட விளையாட்டுக்கு இளைஞா்கள் சென்று விட்டனா்.

இளைஞா்களின் உடலை வலுவாக்கி சிறந்த மல்யுத்த வீரா்களைஉருவாக்க அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சியை மேற்கொள்ள பிரதமா் திட்டமிட்டுள்ளாா். இதற்காக அனைத்து கிராமங்களிலும் மல்யுத்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் தான் மல்யுத்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. உலக அளவில் 185 நாடுகளில் மல்யுத்த விளையாட்டு நடைபெறுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.