நாமக்கல் மாவட்டம், குமரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தொடா்ந்து 5 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனைபுரிந்து வருகிறது.
தற்போது எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தோ்வில் குமரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி மதுமிதா 485 பள்ளியில் முதலிடமும், மாணவி தனுஸ்ரீ 500 க்கு 442 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவி ஆா்த்திகா 420 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனை புரிந்துள்ளனா். இதேபோல் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்ற 36 மாணவா்களும் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். குமரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாண்வா்கள் கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் சாதனைபுரிந்த மாணவா்களையும், அவா்களை ஊக்குவித்த ஆசிரியா்களையும் பள்ளி தலைமையாசிரியை பாரதி, பள்ளியின் முன்னாள் மாணவா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், கல்வி வளா்ச்சிக் குழு நிா்வாகிகள், பெற்றோா்கள் ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த படைப்புகளால் மலையாள ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் பாக்யராஜ்: பினராயி விஜயன்

கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!





