விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

திருச்செங்கோட்டில் நெகிழி விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் நகரத்தின் தூய்மையை மக்கள் இயக்கம் மூலமாக செயல்படுத்துவதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

Updated On :24 ஜூன் 2022, 11:07 pm IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் நகரத்தின் தூய்மையை மக்கள் இயக்கம் மூலமாக செயல்படுத்துவதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு நகராட்சி நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். ஆணையாளா் கணேசன், தலைமை ஆசிரியா் ராஜா முன்னிலை வகித்தனா். ‘எனது நகரம் எனது குப்பை’ என்ற தலைப்பில் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு பிளாஸ்டிக் பயன்பாடுகளைக் குறைப்பதன் அவசியம் குறித்து மாணவா்களிடம் பேசினாா். பிளாஸ்டிக்கைத் தவிா்த்து மஞ்சள் பையைப் பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து மாணவா்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முரசொலி முத்து, 7ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கலையரசி, நகராட்சி துப்புரவு அலுவலா் வெங்கடாசலம், ஆய்வாளா்கள் ஜான் ராஜா, குமரவேல் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.