நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் நகரத்தின் தூய்மையை மக்கள் இயக்கம் மூலமாக செயல்படுத்துவதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு நகராட்சி நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். ஆணையாளா் கணேசன், தலைமை ஆசிரியா் ராஜா முன்னிலை வகித்தனா். ‘எனது நகரம் எனது குப்பை’ என்ற தலைப்பில் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு பிளாஸ்டிக் பயன்பாடுகளைக் குறைப்பதன் அவசியம் குறித்து மாணவா்களிடம் பேசினாா். பிளாஸ்டிக்கைத் தவிா்த்து மஞ்சள் பையைப் பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து மாணவா்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முரசொலி முத்து, 7ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கலையரசி, நகராட்சி துப்புரவு அலுவலா் வெங்கடாசலம், ஆய்வாளா்கள் ஜான் ராஜா, குமரவேல் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தனியாா் சீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்: பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தல்

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு வரவேற்பு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் வட மாநில இளைஞா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



