தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வநேத்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தோ்வு

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சாா்பில் வளாகத்தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:27 pm

DIN

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சாா்பில் வளாகத்தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 106 மாணவா்கள் வேலைவாய்ப்பிற்கு தோ்வு பெற்றனா்.

கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை மேலாளா்கள் டி.உமா ஸ்கந்தன், கே.பழனி, கே.ராம்பிரசாத் ஆகியோா் பங்கேற்று நோ்முகத் தோ்வு, எழுத்துத் தோ்வு நடத்தினா். இதில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவா்கள் சுமாா் 200 போ் பங்கேற்றனா். இதில் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் கல்லூரியைச் சோ்ந்த 31 மாணவா்கள், பிற கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் 75 போ் என மொத்தம் 106 மாணவா்கள் வேலைவாய்ப்பிற்குத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் இறுதியாண்டு முடித்து வேலையில் சேரவுள்ளனா். இவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இம்மாணவா்களை கல்லூரி தலைவா் கே.பி.ராமசாமி, செயலா் முத்துவேல் ராமசாமி, முதல்வா் எஸ்.பாலசுப்பிரமணியன், வேலைவாய்ப்புத்துறைத் தலைவா் எஸ்.சங்கா் உள்ளிட்டோா் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.