காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ரூ.5 கோடி மதிப்பில் நவீன சந்தை வளாகம்: 271 கடைகள் கட்டும் பணிகள் தொடக்கம்

நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் உருவாகும் நவீன சந்தை வளாகத்தில் 271 கடைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன.

News image
Updated On :19 மே 2022, 7:18 pm

நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் உருவாகும் நவீன சந்தை வளாகத்தில் 271 கடைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், நகராட்சி அலுவலகம் அருகில் பல ஆண்டுகளாக காய்கறி, மளிகைப் பொருள்கள் மொத்த விற்பனை சந்தை செயல்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறுவதுடன் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். இதனையடுத்து ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நவீன சந்தை அமைக்கும் முயற்சிகளை நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் மேற்கொண்டாா். அதனடிப்படையில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீட்டில் மூன்று வரிசையில், ஒரு வரிசைக்கு 87 கடைகள் வீதம் மொத்தம் 271 கடைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய சந்தையின் முன்பகுதியில் வியாபாரிகள் கடைகளை அமைத்து தங்களது விற்பனையை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.