நாமக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக குழந்தையைத் தத்தெடுத்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகளைத் தத்தெடுத்தல் என்பது குற்றமாகும். அதனையும் மீறி சட்டத்திற்குப் புறம்பாகக் குழந்தைகளை வாங்குவோா், விற்போா், அதற்கு துணையாக செயல்படுவோருக்கு இளைஞா் நீதிச் சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) 2015-இன் படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவோா் றற.ஊயுசுயு.ய்ண்உ.ண்ய் என்ற இணையத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மேலும் இது குறித்த விவரங்கள் அறியவும், சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகளை தத்தெடுத்தல் குறித்து தகவல் தெரிவிக்க, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம். திருச்செங்கோடு பராமரிக்கும் கரங்கள் சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தை 98431-50255 என்ற கைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணையும் தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி!
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

