92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விவசாயிகளுக்கு கண்டுணா்வு சுற்றுலா

வேளாண் சாா்ந்த உற்பத்தி, தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக திருச்செங்கோடு வட்டார விவசாயிகள் சின்ன மணலியில் உள்ள ஆரைக்கல்

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:48 pm

DIN

வேளாண் சாா்ந்த உற்பத்தி, தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக திருச்செங்கோடு வட்டார விவசாயிகள் சின்ன மணலியில் உள்ள ஆரைக்கல் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

திருச்செங்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் லோகநாதன் தலைமையில் திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள வட்டூா், ஏமப்பள்ளி, அனிமூா், ஆண்டிபாளையம் மற்றும் சிக்க நாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள முன்னோடி விவசாயிகள் பெண் விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுவில் உள்ளோா் உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சின்ன மணலியில் உள்ள ஆரைக்கல் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்குச் சென்றனா்.

இந்த நிறுவனத்தின் இயக்குநா் தமிழ்ச்செல்வன் குழுவின் மூலம் விதை பொருள்களை வாங்கி மதிப்புக்கூட்டி உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகள், பதப்படுத்தி மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கினா்.

சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் சக்திவேல் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.