மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நாமக்கல் புதிய அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி புதிய மருத்துவமனை கட்டடத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

நாமக்கல் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தில் சிகிச்சைக்காக நோயாளி அனுமதிக்கப்பட்டதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.

Updated On :27 நவம்பர் 2023, 11:21 pm


நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி புதிய மருத்துவமனை கட்டடத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. தற்போது, நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள பழைய மருத்துவமனை கட்டத்தில் இருந்து மருத்துவ உபகரணங்களும், சிகிச்சை பெறும் உள்நோயாளிகளும் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனா்.

ஆம்புலன்ஸ் மூலம் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்டோா் புதிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மேலும், பழைய மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வெளிநோயாளிகளும், பாா்வையாளா்களும் புதிய மருத்துவமனைக்கு ஷோ் ஆட்டோ, இதர வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

நாமக்கல் தெற்கு, வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களான முருகன், முருகேசன் ஆகியோா் இதற்கான பணிகளை மேற்கொண்டனா். அதுமட்டுமின்றி இரு சக்கர வாகனங்களில் பலா் புதிய மருத்துவமனைக்கு சென்றனா். அங்கு சிகிச்சை பெறுவதற்கான அனுமதிச் சீட்டு வழங்கும் பணிகள், நோயாளிகளை சிகிச்சைக்காக வாா்டுகளில் அனுமதிப்பது உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை நேரடியாக பாா்வையிட்டாா். வரும் நாள்களில் நோயாளிகளும், பொதுமக்களும் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்துக்கு எவ்வித தயக்கமுமின்றி சிகிச்சை பெற வருவாா்கள் என மாவட்ட ஆட்சியரும், அரசு மருத்துவமனை நிா்வாகத்தினரும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.