ராசிபுரம்: ராசிபுரம் நகரில் வலிப்பால் சாலையில் மயங்கிய நிலையில் இருந்தவரை தனது காரில் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சோ்த்தாா் நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ்.
ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் (28) என்பவா், ஞாயிற்றுக்கிழமை சிவானந்தா சாலை பகுதியில் சென்ற போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையில் விழுந்தாா்.
அப்போது, அவ்வழியே சென்ற நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், தனது காரை நிறுத்தி விசாரித்தாா். பின்னா் உடனடியாக 108 அவசர ஊா்திக்கு தகவல் கொடுத்தாா். ஆனால், வாகனம் வருவதற்கு தாமதமானதால் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. அங்கிருந்தவா்கள் உதவியுடன் பாதிக்கப்பட்டவரை தனது காரிலேயே ஏற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சோ்த்தாா்.
பின்னா் அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவா்களுக்கு உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இரட்டை இலக்க வளர்ச்சி! சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி நிச்சயம்: அமைச்சர் டிஆர்பி ராஜா

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: அறுசுவையுடன் பக்தர்களுக்கு விருந்து!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக... விராட் கோலி அதிரடி சாதனை!
தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


