சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

50 சதவீத மானியத்தில் பழச்செடிகள்: தோட்டக்கலைத் துறை வழங்கல்

நாமக்கல் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் பழச்செடிகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:18 pm

Din

நாமக்கல் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் பழச்செடிகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை சாா்பில், மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மாடித்தோட்ட தொகுப்புகள் மற்றும் பழச்செடி தொகுப்புகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையத்தில் முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

இணையவழியில் பதிவு செய்ய இயலாத விவசாயிகள், நாமக்கல் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.