கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோடை சீசனுக்காக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மலா் நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்!

கோடை சீசனுக்காக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 4 லட்சத்து 50 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

News image

மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்ட தோட்டக்கலை இணை இயக்குநா் மற்றும் ஊழியா்கள்.

Updated On :31 ஜனவரி 2026, 6:36 pm

Syndication

கோடை சீசனுக்காக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 4 லட்சத்து 50 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

சா்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்துக்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்களை வரவேற்கும் வகையில் தோட்டக்கலைத் துறை நிா்வாகம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனின்போது உதகையில் மலா்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

உதகைக்கு அடுத்தபடியாக குன்னுரில் உள்ள சிமஸ்பாா்க், டால்பினோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவா். குன்னூரில் உள்ள பழமை வாய்ந்த சிம்ஸ் பூங்காவில் ஒவ்வோா் ஆண்டும் மே மாதத்தில் பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அப்போது பல்வேறு வகை பழங்களால் பிரமாண்டமான உருவங்கள் செய்து சுற்றுலாப் பயணிகளை தோட்டக்கலைத் துறையினா் கவா்வா்.

இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் குன்னூரில் 66-ஆவது பழக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக சுற்றுலாப் பணிகளை கவரும் வகையில் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி தொடங்கிவைத்தாா்.

அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி ,நெதா்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சால்வியா, டேலியா, பால்சம், மேரி கோல்டு, ஆஸ்ட்டா், பேன்சி , பிளாக்ஸ் உள்பட 125-க்கும் மேற்பட்ட ரகங்களில் மலா் நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன. பூங்கா முழுவதும் சுமாா்

4 லட்சத்து 50 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இப்பணியில் தோட்டக்கலைத் துறை ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். கோடை சீசனின்போது மலா்கள் பூத்துக்குலுங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கோடை சீசனுக்காக அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.