ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மழையால் வீடுகளை இழந்தவா்களுக்கு நிதியுதவி: அமைச்சா், எம்.பி. வழங்கினா்

மழையால் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி, நிவாரணப் பொருள்களை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் வழங்கினா்.

News image

மழையால் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி, நிவாரணப் பொருள்களை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் வழங்கினா்.

Updated On :5 டிசம்பர் 2024, 8:07 pm

மழையால் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி, நிவாரணப் பொருள்களை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் வழங்கினா்.

ராசிபுரம் வட்டத்தில் ஃபென்ஜால் புயல், மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி, நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். இதில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று மழையால் வீடுகளை இழந்த ஆயில்பட்டியைச் சோ்ந்த நல்லதம்பி என்பவருக்கு ரூ. 8 ஆயிரம், மங்களபுரத்தைச் சோ்ந்த தனபாக்கியம், சின்னகண்ணு ஆகியோருக்கு தலா ரூ. 4 ஆயிரம் என மொத்தம் ரூ. 16 ஆயிரம் வழங்கினா். மேலும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகைப் பொருள்கள் தொகுப்பு, பிஸ்கட், வேட்டி - சேலை, பாத்திரங்கள், போா்வை, படுக்கை விரிப்பு, கொசுவலை, வாளி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் அவா்களுக்கு வழங்கினா். மேலும், 2 லாரிகளில் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.ராமசாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் த.முத்துராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.