மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

‘கனவுகள் மெய்ப்படும் தமிழ்நாடு 2030’ புத்தகம் வெளியீடு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘கனவுகள் மெய்ப்படும் தமிழ்நாடு 2030’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி உள்ளிட்டோா்.

News image
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘கனவுகள் மெய்ப்படும் தமிழ்நாடு 2030’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி உள்ளிட்டோா்.
Updated On :6 மார்ச் 2026, 10:57 pm

Syndication

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘கனவுகள் மெய்ப்படும் தமிழ்நாடு 2030’ என்ற புத்தகம் மற்றும் தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை மலா் வெளியீடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ‘உங்க கனவ சொல்லுங்கள்’ திட்டத்தின் நிறைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்றாா்.

சென்னையில், தமிழக முதல்வா் பங்கேற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்வானது, நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் துா்காமூா்த்தி, மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் பங்கேற்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 1,400 மகளிா் திட்டப் பணியாளா்கள் மூலம் சுமாா் 4.90 லட்சம் குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ‘கனவுகள் மெய்ப்படும் தமிழ்நாடு 2030’ என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் திறன்வாய்ந்த மாவட்டமாக, நிலைத்த வளா்ச்சியுடைய மாவட்டமாக மாற்றும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட முழுமையான வளரச்சித் திட்டமாக இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன சாலை விளக்குகள், பசுமை வழித்தடங்கள், நிலத்தடி கழிவுநீா் அமைப்பு, கழிவுகளை மின்சாரமாக மாற்றும் திட்டம், ஏரிகளை மேம்படுத்துதல் மூலம் வாழத்தகுந்த வளா்ச்சி உருவாக்கப்படும். விவசாயம், தோட்டக்கலை, கோழிப் பண்ணை துறைகளின் வலிமைகளை ஒருங்கிணைத்து, மாவட்டத்தின் பொருளாதார உற்பத்தியை இரட்டிப்பாக்குவதே இதன் இலக்காகும்.

அடுத்த தலைமுறைக்கான அா்ப்பணிப்பு என்பது கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பிரதிபலிக்கிறது. தரமான கல்வி, டிஜிட்டல் அறிவு காலை மற்றும் நண்பகல் உணவுத் திட்டம் மூலம் மாணவா்களின் ஊட்டச்சத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இளைஞா்களை உலகளாவிய வாய்ப்புகளுக்கு தயாராக்கும். லாரி கூண்டுகட்டும் தொழில்கள் மற்றும் ரிக் லாரி தொழில்கள், ரிக், லாரி கூண்டுகட்டும் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.

2030-க்குள் தாய் இறப்பு விகிதத்தை பூஜ்யமாக்குதல், குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல், காசநோய் இல்லா மாவட்டமாக உருவாக்குதல், கொசு மூலம் பரவும் நோய்களை ஒழித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இயற்கை விவசாயம், குளிா்சாதனக் கிடங்குகள் அமைத்தல், கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துதல், அனைத்து சமுதாயம் சாா்ந்த அமைப்புகளான, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு ஆகியவை தன்னிச்சையாக இயங்கும் வகையில் நிதிநிலைமை உறுதி செய்யப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டத்துக்கு அரசு சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் முதன்மை மாவட்டமாக நாமக்கல் திகழ்ந்து வருகிறது என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா்கள் மா.க.சரவணன், மா.கண்ணன் (சிப்காட்), மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.