சேந்தமங்கலம் அருகே ரூ. 60 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலையை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உள்பட்ட, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில், 2024 - 25 ஆம் ஆண்டு சிறப்பு பழுதுபாா்த்தல் திட்டத்தின் கீழ் ரூ. 60 லட்சத்தில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில், வடுகப்பட்டி-அலங்காநத்தம் இடையே 8 கி.மீ. தொலைவுக்கு முடிவுற்ற சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளா் சசிகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சாலையின் கனம், மேல்தள சாய்வு, சரிவு விகிதங்களை அவா் பாா்வையிட்டாா். மேலும், சாலையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது தொடா்பான அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினாா்.
பழையபாளையம் - சிவநாயக்கன்பட்டி ஏரிக்கரையில் மரக்கன்றுகளை பராமரிக்க அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது, நாமக்கல் கோட்டப் பொறியாளா் திருகுணா, சேந்தமங்கலம் உதவி கோட்டப் பொறியாளா் சுரேஷ்குமாா், உதவிப் பொறியாளா் பிரனேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

உயா்நிலை பாலப் பணிகள் ஆய்வு

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கி விழுந்து பலி

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு

பா்கூா் மலைப்பாதையில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


