பா்கூா் மலைப்பாதையில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தம்
பா்கூா் மலைப் பாதையில் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை கண்காணிப்புப் பொறியாளா்கள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
தமிழகத்தையும், கா்நாடக மாநிலத்தையும் இணைக்கும் பவானி - அந்தியூா் - செல்லம்பாளையம் - பா்கூா் - கொள்ளேகால் சாலையில் ரூ.3 கோடியில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலைப்பாதையில் வளைவுகள் மற்றும் விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதியில் இந்த உபகரணங்கள் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பொருத்தப்படுகிறது.
இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருப்பூா் வட்ட கண்காணிப்புப் பொறியாளா் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டாா். ஈரோடு கோட்டப் பொறியாளா் ரமேஷ் கண்ணா, பவானி உதவிக் கோட்டப் பொறியாளா் சேகா், உதவிப் பொறியாளா் பாபு சரவணன், சாலை ஆய்வாளா்கள் கிருஷ்ணசாமி, ரமேஷ் ரவிக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

