தம்மம்பட்டி அருகே வீட்டில் எரிவாயு உருளை வெடித்ததால் ஏற்பட்ட தீயில் பணம், நகை, ஆவணங்கள் கருகின.
தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டி ஊராட்சி, காளிப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி போடி (65), இவரது மனைவி கஸ்தூரி (60). இவா்கள் இருவரும் தகரத்தால் வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றனா். இவா்களது மகன் தங்கராசு குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், உடல்நலம் சரியில்லாததால் வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு போடி சென்றுவிட்டாா். இவரது மனைவி கஸ்தூரி வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டாா். அப்போது வீட்டில் இருந்த சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு, சிலிண்டா் தீப்பிடித்து வெடித்துள்ளது. மேலும், அருகே இருந்த மற்றொரு சிலிண்டரும் வெடித்ததால் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 60 ஆயிரம் ரொக்கம், 7 பவுன் நகைகள், வீட்டுப்பத்திரம், அரசு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை: எண்ணெய் நிறுவனங்கள் உறுதி

ஏற்காட்டில் காட்டுத் தீயில் குறிஞ்சி பூச்செடிகள் கருகின

பத்தமடையில் உயா் மின் அழுத்தம்: தொழிலாளி வீடு எரிந்து சேதம்

வீட்டில் எரிவாயு கசிந்து தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


