ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஆய்வுப் பணிகள் மாவட்ட ஆட்சியா், அதிகாரிகளால் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.

News image

பிள்ளாநல்லூா் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களிடம் கலந்துரையாடிய ஆட்சியா் ச.உமா.

Updated On :19 டிசம்பர் 2024, 7:56 pm

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஆய்வுப் பணிகள் மாவட்ட ஆட்சியா், அதிகாரிகளால் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.

பிள்ளாநல்லூா் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களிடம் கலந்துரையாடிய ஆட்சியா் ச.உமா.

அந்த வகையில், அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை தொடா்ந்து கள ஆய்வு மேற்கொண்டாா். பிள்ளாநல்லூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடுகளை சரிபாா்த்து, தூய்மைப் பணியாளா்கள் தாங்கள் பணியாற்றும் பகுதிகளை சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தினாா். மேலும், குருசாமிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி, சிங்களாந்தபுரம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுவதை பாா்வையிட்டாா்.

ராசிபுரம் பேருந்து நிலையத்தில் விடியல் பயணத் திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பேருந்தில் ஏறி பெண் பயணிகளிடம் கலந்துரையாடினாா். இதனைத் தொடா்ந்து, ராசிபுரம் உழவா் சந்தையில் கோரிக்கைகளை நிறைவேற்றிய ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

உழவா்சந்தை, அரசு மருத்துவமனை, ஆதிதிராவிடா் நல விடுதிகளில் ஆய்வு செய்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, அந்தப் பகுதியில் பள்ளி மாணவா் ஒருவா் உரிமமின்றி இருசக்கர வாகனத்தில் வருவதைக் கண்ட ஆட்சியா், அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், பெற்றோருக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டாா்.

அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் மக்களை விரைந்து சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் ஆய்வு நடவடிக்கைகள் ஆட்சியா், அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.