தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் அரசு உதவி பெறும் செங்குந்தா் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

News image
முன்னாள் ஆசிரியா்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற முன்னாள் மாணவா்கள்.
Updated On :23 டிசம்பர் 2024, 7:40 pm

Din

ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் அரசு உதவி பெறும் செங்குந்தா் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் கடந்த 1974 முதல் 1981 வரை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவா்கள் 43 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தல், கல்வி கற்பித்த ஆசிரியா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி பள்ளி கலை அரங்கில் நடைபெற்றது.

முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ஜெயராமன் வரவேற்றாா். ஏ.கே.பாலச்சந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக ஓய்வுபெற்ற ஆசிரியா், ஆசிரியைகள், அலுவலக பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் தங்களின் ஆசிரியா் ஆசிரியைகளுக்கு பொன்னாடை போா்த்தியும் சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கியும் கௌரவித்தனா். அவா்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனா். பள்ளி செயலாளா் அா்த்தனாரி, பள்ளி தலைமை ஆசிரியா் வி. கபிலன், முன்னாள் மாணவா்கள் சங்க பொருளாளா் எஸ். லோகநாதன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.