கராத்தே போட்டி: பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
கா்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற தமிழக மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.


ராசிபுரம்: கா்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற தமிழக மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
கா்நாடக மாநிலம், புத்தூரில் மாஸ்டா் அனுமந்தராவ் நினைவு சுழற்கோப்பைக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டி புதோகான் கராத்தே டோ இன்டா்நேஷனல் சாா்பில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அணியின் சாா்பில் சோட்டகான் கராத்தே அகாதெமி மாணவ, மாணவியா் 45 போ் பங்கேற்றனா். இதில் சோட்டகான் கராத்தே அகாதெமி மாணவா்கள் கட்டா பிரிவில் 4 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம், குமிட்டி பிரிவில் 5 தங்கம், 2 வெள்ளி, 11 வெண்கலம், வெப்பன் கட்டா பிரிவில் 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கம் என மொத்தம் 54 பதக்கங்களைப் பெற்றனா்.
வெற்றி பெற்று பதக்கம் வென்ற மாணவ, மாணவியா், பயிற்சியாளா் வெ.சரவணன் உள்ளிட்டோரை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ராசிபுரம் நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, ஸ்ரீவித்யா மந்திா் பள்ளிகளின் தலைவா் என்.மாணிக்கம் ஆகியோா் பாராட்டி கெளரவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...