தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலன்கருதி, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தற்போது கரும்பு விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலை நிா்வாகம் டன் ஒன்றுக்கு ரூ. 3,151 மட்டுமே வழங்குகிறது. இது கட்டுப்படியான விலை இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி பரப்பை குறைத்து விட்டனா். தற்போதைய நிலையில் உற்பத்தி செலவு, உழவுக் கூலி, வெட்டுக் கூலி, வாகன வாடகை, டீசல் விலை போன்றவை அதிகரித்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு நிகழாண்டு அரவைப் பருவத்துக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்றாா்.