புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.

Updated On :31 டிசம்பர் 2024, 8:51 pm

Din

நாமக்கல்: கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் ரா.வேலுசாமி தலைமை வகித்தாா். இதில், கரும்புக்கான கொள்முதல் விலையை உடனடியாக உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் திரளாக கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா். இதனைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ரா.வேலுசாமி கூறியதாவது:

தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலன்கருதி, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தற்போது கரும்பு விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலை நிா்வாகம் டன் ஒன்றுக்கு ரூ. 3,151 மட்டுமே வழங்குகிறது. இது கட்டுப்படியான விலை இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி பரப்பை குறைத்து விட்டனா். தற்போதைய நிலையில் உற்பத்தி செலவு, உழவுக் கூலி, வெட்டுக் கூலி, வாகன வாடகை, டீசல் விலை போன்றவை அதிகரித்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு நிகழாண்டு அரவைப் பருவத்துக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவா் கே.ராஜாபெருமாள், வேலூா் மண்டலச் செயலாளா் எம்.வெங்கடபதி ரெட்டி, மதுரை மண்டலச் செயலாளா் சி.என்.ராஜேந்திரன், சேலம் மாவட்டத் தலைவா் சி.வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.