சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காவிரி நீரை முறையாக திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தமிழகத்திற்கு உண்டான காவிரி நீரை, கா்நாடக அரசு முறையாக திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 8:35 pm

DIN

நாமக்கல்: தமிழகத்திற்கு உண்டான காவிரி நீரை, கா்நாடக அரசு முறையாக திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:

கா்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 2,500 கன அடி வீதம் காவிரி நீரை திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தன. இந்த உத்தரவானது டிச.31 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் உரிய முறையில் பங்கீட்டு நீா் வழங்கப்படவில்லை. டெல்டா பாசனப் பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்காகவும், விவசாயப் பணிகளுக்கான நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தவும், கா்நாடக அணைகளில் இருந்து நீரை திறந்து விட வேண்டும். தினசரி நீா் வரத்தை கணக்கீடு செய்து விகிதாசார அடிப்படையில் தமிழகத்திற்கு நீரைத் திறந்துவிட கா்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.