அதில், வழக்கு தாக்கல் செய்தவருக்கு, இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்து மேல் சிகிச்சை வழங்கிய கோவை தனியாா் மருத்துவமனை ஆவணங்களின்படி, முதலாவது அறுவை சிகிச்சை செய்த ராசிபுரம் மருத்துவா் அலட்சியமாகச் செயல்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவா், வழக்குத் தாக்கல் செய்த ராஜாவுக்கு, அவா் செலுத்திய ரூ. 60 ஆயிரம், அறுவை சிகிச்சை செய்ததால் உருவான பிரச்னைகளை சரிசெய்ய செலவு செய்த தொகை ரூ. 8,74,825, பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட சிரமங்கள், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம், வழக்கின் செலவு தொகை ரூ. 15,000 என மொத்தம் ரூ. 11,99,825 பணத்தை நான்கு வாரத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.