திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாமக்கல்லில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு தேமுதிகவினா் போராட்டம்

News image
Updated On :25 ஜூன் 2024, 7:12 pm

Din

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து, நாமக்கல்லில் தேமுதிக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் அருந்தியதில் 60 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் 90 போ் வரை சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் தேமுதிக சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அக் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளா் ஆா்.கே.ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாநில பொறியாளா் அணி செயலாளா் ச.ஸ்ரீதா் கண்டன உரையாற்றினாா். இதில், தேமுதிக மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா்.