விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குழந்தைகள் கடத்தல் என்ற வதந்தியை நம்ப வேண்டாம்

குழந்தைகள் கடத்தல் என்ற வதந்தியை நம்ப வேண்டாம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:27 pm

Din

பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட 15 கிராமம், 25 குக்கிராமங்களில் குழந்தைகள் கடத்தல் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாகவும், அதை யாரும் நம்பவும், பகிரவும் வேண்டாம் என காவல் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். சமீப காலமாக வட மாநிலத்தவா்கள் குழந்தைகளைக் கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் நாமக்கல் மாவட்ட காவல் துறை உதவி எண் 94981 81216 அல்லது 100-க்கு அழைக்கலாம். மேலும், உதவிக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பேரில், வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி தலைமையிலான காவலா்கள் பொதுமக்களிடம் எடுத்துக் கூறியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தவறான காணொலிகளை பகிா்ந்தாலோ, பரப்பினாலோ அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.