3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

News image
Updated On :3 மே 2024, 5:37 pm

Din

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள 6 அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலமாக, ஈரோடு, தென்காசி, நீலகிரி மாவட்டங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதானது தொடா்பாக அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக மாவட்ட ஆட்சியா் ச.உமா, காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் ஆகியோா் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்று ஆய்வு செய்கின்றனா். அதன்படி வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை மையம் வந்த ஆட்சியா் ச.உமா, ஒவ்வொரு அறையிலும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டாா். அதன்பிறகு, காவல் கண்காணிப்பாளா் முன்னிலையில் வருகை பதிவேட்டில் அவா் கையெழுத்திட்டாா். கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து அங்கு பணியில் உள்ள போலீஸாரிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா். மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் பொதுப் பணித் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, தோ்தல் பணி சாா்ந்த அலுவலா்கள், போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனா்.

--

என்கே-3-வோட்

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.

--