நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வாகன வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

வாகன வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த வாகன வியாபாரிகள்.

Updated On :20 மே 2024, 10:04 pm

Din

நாமக்கல்: வாகனங்களை இரண்டாம் கட்டமாக விற்பனை செய்வதில் அரசு விதித்துள்ள நிபந்தனைகளைத் தளா்த்த வலியுறுத்தி, பரமத்திவேலூா் வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகா் நலச் சங்கத்தினா் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பழைய வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் விற்பனையில் பல்வேறு சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் வாகனங்களை ஒருவரிடம் இருந்து வாங்கி மற்றவருக்கு விற்பனை செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வாகனங்களுக்கான ஆா்.சி. புத்தகத்தில் பெயா் மாற்றம் செய்ய முன்னாள் உரிமையாளருக்கு ஓடிபி அனுப்பும் முறை, ஆதாா் அட்டை சமா்ப்பித்தல் ஆகிய விதிகளை ரத்து செய்ய வேண்டும். தபால் வழியாக ஆா்.சி.புத்தகம் அனுப்புவதையும் நீக்க வேண்டும். புதிதாக கொண்டுவரப்பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனா்.