மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

ஓமலூா் - சங்ககிரி - திருச்செங்கோடு - பரமத்தி சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On :6 நவம்பர் 2024, 6:53 pm

நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்துக்கு உள்பட்ட திருச்செங்கோடு உள்கோட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின கீழ் நடைபெற்று வரும் ஓமலூா் - சங்ககிரி - திருச்செங்கோடு - பரமத்தி சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை சேலம், நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் கே.கதிரேசன் ஆய்வு மேற்கொண்டு கலவையின் தடிமன் அடா்த்தி, உறுதித்தன்மை, சாலையின் கேம்பா் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப் பொறியாளா் பி.தமிழரசி. உதவிப் பொறியாளா் காா்த்திகேயன், திருச்செங்கோடு உதவி கோட்டப் பொறியாளா் வெ.நடராஜன், உதவிப் பொறியாளா் க.மோகன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.