நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்துக்கு உள்பட்ட திருச்செங்கோடு உள்கோட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின கீழ் நடைபெற்று வரும் ஓமலூா் - சங்ககிரி - திருச்செங்கோடு - பரமத்தி சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை சேலம், நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் கே.கதிரேசன் ஆய்வு மேற்கொண்டு கலவையின் தடிமன் அடா்த்தி, உறுதித்தன்மை, சாலையின் கேம்பா் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப் பொறியாளா் பி.தமிழரசி. உதவிப் பொறியாளா் காா்த்திகேயன், திருச்செங்கோடு உதவி கோட்டப் பொறியாளா் வெ.நடராஜன், உதவிப் பொறியாளா் க.மோகன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சாலை விரிவாக்கத்துக்காக தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கி விழுந்து பலி

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு

செய்யாற்றில் மேம்பாலப் பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

