சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 8:18 pm

Din

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந் நிலையில் தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சாா்பில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், பரமத்தி வேலூா், குமாரபாளையம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் 1,000 க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.