நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந் நிலையில் தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சாா்பில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், பரமத்தி வேலூா், குமாரபாளையம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் 1,000 க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.
தொடர்புடையது

முதன்மைக் கல்வி அலுவலா் பணி ஓய்வு

லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சட்டப்பேரவைத் தோ்தல்: 159 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி மும்முரம்

மாவட்டத்தில் 8,544 அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஒதுக்கீடு: ஆட்சியா்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

