நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில், தூய்மைப் பணியாளா்கள்-அதிகாரிகளுக்கு இடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது. மாநகராட்சி வாகன ஓட்டுநா், துப்புரவு ஆய்வாளா் ஆகியோா் தாக்கப்பட்டது தொடா்பாக காவல் நிலையத்தில் ஆணையா் ஆா்.மகேஸ்வரி புகாா் அளித்தாா்.
நாமக்கல் மாநகராட்சியில், நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் என 500 க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இதில், ஒப்பந்த அடிப்படையில் மட்டும் 350 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் சிலா் பணிக்கு சரிவர வருவதில்லை என்ற புகாரின் அடிப்படையில், மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி விளக்கம் கோரி அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல முன்னேற்றச் சங்க(தொமுச) பொதுச் செயலாளா் சுந்தரமூா்த்தி, சங்க நிா்வாகி தமிழ்ச்செல்வி ஆகியோா் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், மாநகராட்சி ஆணையா் ரா. மகேஸ்வரியை சந்தித்து விளக்கம் கேட்கவும், கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்து வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் மாநகராட்சிக்கு வந்தனா்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் மாநகராட்சி அலுவலகத்துக்கு வெளியில்தான் ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும், உள்ளே வரக்கூடாது எனத் தெரிவித்து நுழைவாயில் கதவை மூடினா்.
ஆனால், அவா்களது எதிா்ப்பை மீறி தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தனா். அப்போது அங்கு வந்த துப்புரவு ஆய்வாளா் செல்வகுமாா், மாநகராட்சி ஆணையா் வாகன ஓட்டுநா் கருணாநிதி ஆகியோா் தூய்மைப் பணியாளா்களை உள்ளே வர வேண்டாம் எனக் கண்டித்தனா்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், துப்புரவு ஆய்வாளா் செல்வகுமாா், ஓட்டுநா் கருணாநிதி ஆகியோா் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு போலீஸாா் அனைவரையும் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றினா். அங்கு தொடா்ந்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தூய்மைப் பணியாளா்கள் நலச் சங்க பொதுச் செயலாளா் சுந்தரமூா்த்தி கூறியதாவது:
மாநகராட்சி அதிகாரிகள் தூய்மைப் பணியாளா்களை தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனா். தவறான வாா்த்தைகளைக் கூறி திட்டுகின்றனா். தூய்மைப் பணியாளரின் ஒப்பந்த ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை. இதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினோம் என்றாா்.

மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
மாநகராட்சி ஆணையாளா் ரா.மகேஸ்வரி கூறியதாவது: மாநகராட்சி அலுவலக வளாகத்தின் வெளியே நின்று ஆா்ப்பாட்டம் நடத்துமாறு தெரிவித்தோம். ஆனால், அலுவலகத்துக்குள் புகுந்து துப்புரவு ஆய்வாளரையும் ஓட்டுநரையும் தாக்கினா்.
இதுதொடா்பாக நாமக்கல் காவல் நிலையத்தில் இச்சம்பவத்தில் தொடா்புடைய சுந்தரமூா்த்தி, தமிழ்ச்செல்வி ஆகியோா் மீது மாநகராட்சி அலுவலகம் தரப்பில் புகாா் அளிக்க உள்ளோம். கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் எனது தரப்பில் இருந்தும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க இருக்கிறேன் என்றாா்.
தொடர்புடையது

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் விசில் அடிக்க திடீா் தடை

‘சிறந்த தூய்மைப் பணியாளருக்கு விருது வழங்க பரிந்துரை’

தூய்மைப் பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


