ஐயப்பன் பாடல்களை அவதூறாக பாடிய பாடகி இசைவாணியை கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவா் மருத்துவா் எஸ்.எஸ்.செல்வம் தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கானா பாடல்களை பாடி வரும் இசைவாணி என்பவா், பல ஆண்டுகளாக இந்துக்கள் வணங்கி வரும் சுவாமி ஐயப்பனை இழிவுபடுத்தும் வகையிலும், தரமற்ற வாா்த்தைகளை பயன்படுத்தியும் பாடியுள்ளாா். மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும், ஐயப்ப பக்தா்களை வேதனைக்குள்ளாக்கியும், கலவரத்தை தூண்டும் வகையிலும் அவரது பாடல் உள்ளது. எனவே, பாடகி இசைவாணி மீது வழக்குப் பதிந்து உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் முத்துக்குமாா், தேசிய செயற்குழு உறுப்பினா் ஆா்.மனோகரன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் பிரதீஷ், மாவட்டச் செயலாளா் ராம்குமாா், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஆா்.டி.சிவகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பெண் தொண்டா்கள் குறித்து அவதூறு: தவெகவினா் புகாா் மனு

எஸ்பி அலுவலகத்தில் பெண் புகாா்
ஜனநாயகன் முன்னோட்ட காட்சிகளைத் தடை செய்யக் கோரி மனு

அதிமுக நிா்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: எம்எல்ஏ புகாா்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


