போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடம் ஆய்வு

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் ரூ. 10.58 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச.உமா.

Updated On :27 நவம்பர் 2024, 6:33 pm

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் ரூ. 10.58 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ராசிபுரம் நகராட்சி ஆணையா் சு.கணேசன், உதவிப் பொறியாளா் ஏ.ரவி, நகர அமைப்பு அலுவலா் சி.ராஜேந்திரன் ஆகியோருடன் பேருந்து நிலையம் அமையவுள்ள அணைப்பாளையம் பகுதிக்கு நேரில் சென்று பேருந்து நிலையம், சாலைகள், வணிக வளாகம், சுகாதார வளாகம் போன்றவை அமையவுள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து, ராசிபுரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் கலைஞா் நகா் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 5.86 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு வணிக வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவற்றின் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா். பின்னா் பிற்படுத்தப்பட்டோா் காலனி அருகே மத்திய அரசின் நிதி திட்டத்தின் கீழ் ரூ. 1.28 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.